அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – துணைநிலை ஆளுநர் உத்தரவு!!

0
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை - துணைநிலை ஆளுநர் உத்தரவு!!
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை - துணைநிலை ஆளுநர் உத்தரவு!!
அங்கன்வாடி மையங்களில் வாரம் 3 முட்டை – துணைநிலை ஆளுநர் உத்தரவு!!

புதுச்சேரி அரசு சார்பில் 855 அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்ட நிலையில் தற்போது வாரம் 3 முட்டை வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அங்கன்வாடிகளில் முட்டை:

புதுச்சேரி அரசின் கீழ் உள்ள 855 அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக துணை ஆளுநராக பதவி ஏற்ற தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய அரசு நிதியின் படி புதுச்சேரி அங்கன்வாடிகளில் உள்ள 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் 3 முட்டை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 143 தேசிய விருதுகள் – ஊரக வளர்ச்சித்துறை முன்னிலை!!

தற்போது கொரோனா நோய் தாக்கம் காரணமாக குழந்தைகளுக்கு புரதச்சத்து தேவையை உணர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்கான செலவுகளுக்கும் அவர் உத்தரவு வழங்கியுள்ளார். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!