UPSC சிவில் சர்வீஸ் தேர்வெழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
நாடு முழுவதும் கொரோனா தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா முதல் அலை பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா உருமாறி இரண்டாம் அலையாக தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் வெளியீடு!
இந்நிலையில் அரசு பணிக்கான தேர்வுகள் ஏதும் நடைபெறாததால் போட்டித்தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. எனவே தற்போது தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தினசரி 25,000 பக்தர்கள் அனுமதி!
அதன்படி யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வை எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம். முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது. சிறிய கிருமிநாசினி பாட்டிலை எடுத்து வர மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேர்வு எழுதும் மையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.