தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா என்கிற மாணவி 200 க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்:
தமிழகத்தில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தற்போது வெளியிட்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் போன்ற படிப்புகளில் சேர 1.69 லட்ச மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 12 ஆம் வகுப்பில் அந்த மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 21 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. மேலும், இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 23 வரை நடைபெற இருக்கிறது. இதே போல பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரை நடைபெற இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 7.5 சதவீதம் ஒதுக்கீடு பிரிவில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்கல்வி படித்துவிட்டு பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!
Exams Daily Mobile App Download
அதே போல இந்தாண்டு மொத்தமாக 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களின் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார். அதில் பி.இ. கட்ஆப் மதிப்பெண்ணில் தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா என்கிற மாணவி 200 க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், வெளியிடப்பட்டிருந்த தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் பிழைகள் இருந்தாலோ ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரைக்கும் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை அறிய 18004250110 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.