தமிழகத்தில் வேளாண் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு – விரைவில் கலந்தாய்வு!
தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரிகளில் உள்ள இளநிலை அக்ரி படிப்பிற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரேங்க் பட்டியல்:
தமிழகத்தில் தற்போதைய நிலையில், ஐடி துறையில் எந்த அளவிற்கு இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளதோ, அதே அளவிற்கு சமீப காலமாக விவசாயத்தின் மீதும் அவர்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதற்காக வேளாண் படிப்புகளை நோக்கி இளைஞர்கள் அதிகமாக படையெடுக்கும் சம்பவமும் நிகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் இதற்கான படிப்புகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு அவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் கட் ஆப் -ஐ வைத்து மதிப்பிடப்படுகிறது. ரேங்கிங் வரிசையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும். தமிழகத்தில் வேளாண் இளநிலை படிப்புகளுக்காக 12 பாடப்பிரிவுகள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 4,485 இடங்களில் 2,148 இடங்கள் பல்கலை உறுப்பு கல்லூரிகளிலும், 2,337 இடங்கள் இணைப்பு கல்லூரிகளிலும் உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – பதிலுக்கு தனியார் பள்ளிகள் வைத்துள்ள கோரிக்கை!
Exams Daily Mobile App Download
வேளாண் பல்கலையில் 2022 – 2023 நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20-ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் தரவரிசை பட்டியலை பல்கலையின் துணை வேந்தர் கீதாலட்சுமி இன்று காலை 7:15 மணிக்கு வெளியிட்டுள்ளார். மேலும், மாணவர்களுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்