தமிழக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – சுற்றறிக்கை வெளியீடு!

0
தமிழக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு - சுற்றறிக்கை வெளியீடு!
தமிழக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு - சுற்றறிக்கை வெளியீடு!
தமிழக பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான புதிய ஏற்பாடு – சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் தற்போது 1 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடபட்டது. இதையடுத்து தேர்வுக்கான கால அட்டவணை வகுப்பு வாரியாக வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்றும் அதே போல 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது. கடந்த 25ம் தேதி முதல் செய்முறை தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. செய்முறை தேர்வு முடிந்த பிறகு மே 5 முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

TN Job “FB  Group” Join Now

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களைத் தவிர்த்து மீதம் உள்ள நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வு எழுத உரிய அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சார வாரியம் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப செயல்முறை விவரங்கள் இதோ!

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையில் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகத்தை நிறுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தாலும் கூட பொதுத் தேர்வின் போது மின் தடை ஏற்படக் கூடாது. பொதுத் தேர்வு மையங்களுக்கு அருகில் இருக்கும் மின்கம்பிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் பழுதடைந்திருந்தால் உடனடியாக அதை மாற்றம் செய்ய வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!