இந்தியாவில் ரயில்வே பயணிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – தகவல் வெளியீடு!
இந்தியாவில் ஏராளமான மக்கள் பெரும்பாலும் ரயில்களில் தான் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் ரயில்வே துறை பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறது. இதற்கு மத்தியில் ரயில் டிக்கெட் விலை அதிகரித்து உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தால் போக்குவரத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற துறைகளை தொடர்ந்து அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரயில்வேத்துறை பெரும் வருவாய் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டில் பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனெனில் இதில் பயணிகளுக்கு ஏற்றவாறு அத்தியாவசிய வசதிகள் உள்ளது.
அத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கு பேருந்தை விட இதில் கட்டணமும் குறைவு தான் இந்த நிலையில் பயணிகள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் IRCTC வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். சில நேரங்களில் புக்கிங் செய்யும் நேரத்தில் சர்வர் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப காரணங்களால் டிக்கெட் கிடைப்பதில்லை இது போன்ற அவசர சூழலை பயன்படுத்தி சிலர் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி நிதி – அரசாணை வெளியீடு!
தியேட்டர்களில் பிளாக் டிக்கெட் விற்பனை செய்வது போல,ரயில் டிக்கெட்கள் பிளாக்கில் விற்கப்பட்டு வருகிறது. சொல்ல போனால் இது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோதமான மென்பொருள் வாயிலாக பலர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அதனால் பெரும்பாலானவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைப்பதில்லை இதை தடுப்பதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்