தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியை அந்தந்த பள்ளிகள் மூலமாக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என வேலைவாய்ப்பு துறை அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு
தமிழக அரசுத்துறைகளில் பணியாற்ற விரும்பும் நபர்கள் தங்களது கல்வித்தகுதியை அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது அவசியமாகும். இப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்களுக்கு பணியின் போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள் தங்களது கல்வித்தகுதியை வேலை வாய்ப்பு அலுவகலத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!
இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களை பதிவுகளை செய்து கொள்ளலாம். அதன் படி மாணவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தின் வாயிலாக https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
செப்.16 முதல் 16 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் அமல் – கோவை மாவட்ட ஆட்சியர்!
அந்த வகையில் நாளை (செப்டம்பர் 17) முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயின்ற கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான பதிவுகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக CBSE உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளிலும் பயின்ற மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.