10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு – மார்ச் 28 முதல் தொடக்கம்!

0
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு - மார்ச் 28 முதல் தொடக்கம்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு - மார்ச் 28 முதல் தொடக்கம்!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு – மார்ச் 28 முதல் தொடக்கம்!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலையின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய அச்சுறுத்தலாக ஒமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக வருகிறது. மேலும் இந்த ஓமைக்ரான் வைரஸ் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இதில் குறிப்பாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டையும் அமல்படுத்தியுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகள், மதுபான பார்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர், நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் 50% நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசியை செலுத்திய சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

ஆனால் பொது தேர்வு எழுதும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் பிப்ரவரி மாதத்தின் 3வது வாரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதம் இறுதியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கான தேதிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. கன்னடம், தமிழ் உள்ளிட்ட முதல் மொழி தேர்வு – மார்ச் 28

2. ஆங்கிலம், கன்னட தேர்வு – மார்ச் 30

3. கணித தேர்வு – ஏப்ரல் 4

4. சமூக அறிவியல் – ஏப்ரல் 6

5. இந்தி உள்பட 3-வது மொழி – ஏப்ரல் 8

6. அறிவியல் தேர்வு – ஏப்ரல் 11

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!