அதிகரிக்கும் சைபர் க்ரைம் குற்றங்கள்.. மக்களை காக்க காவல் துறையின் புதிய முயற்சி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சைபர் குற்றங்கள் நிகழ்வது அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகர காவல்துறை இது குறித்த புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சைபர் க்ரைம்
தற்போதைய கால கட்டத்தில் அனைத்து பொருட்களையம் ஆன்லைன் முறையில் சுலபமாக பெற முடிகிறது. இதில் ஏராளமான நன்மைகளும் அதே சமயம் தீமைகளும் இருக்கிறது. அதாவது ஆன்லைன் முறையில் முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் மோசடிகளை நிகழ்த்த தினமும் புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதனால் பொதுமக்களிடம் சைபர் க்ரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதையடுத்து தற்போது சைபர் க்ரைம் குறித்த ‘முத்துவும், 30 திருடர்களும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை சென்னை மாநகர காவல்துறை கடந்த மாதம் வெளியிட்டுள்ளனர். இந்த புத்தகத்தில் ஆன்லைன் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் 30 குற்ற செயல் வழிமுறைகள் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த புத்தகமானது பொதுமக்களிடையே எளிதில் கிடைக்கும் வகையில் QR Code வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு ஷாக் அடிக்கும் செய்தி – டிச. 9 இத்தனை இடங்களில் மின்தடை!
Exams Daily Mobile App Download
இந்த QR Code-ஐ பொதுமக்கள் தங்களின் மொபைலில் Scan செய்து சைபர் குற்றங்களை படித்தறியலாம். மேலும் தற்போது 3 விதமான சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. இந்த குற்றங்கள் குறித்தும் சைபர் க்ரைம் புத்தகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் 3 விதமான சைபர் குற்றங்கள்:
- ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலமாக பண மோசடி செய்து வருகின்றனர்.
- இதையடுத்து காவல் அதிகாரிகள் போல் பேசி மிரட்டி பணத்தை பறிக்கின்றனர்.
- வங்கி கணக்கில் இருந்து பணம் தவறுதலாக உங்களுக்கு டெபிட் செய்யப்பட்டு விட்டது என கூறி பண மோசடி செய்கின்றனர்.