அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுகளை எழுதும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்வு எழுதி முடிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வுகளில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி, அவர்களுக்கு மறு தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுகள் நடத்தப்படும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுத துவங்கும் முன்பாக, மாணவர்கள் வினாத்தாளை சரிபார்த்த பின்னாக தேர்வுகளை எழுத வேண்டும். தேர்வுகளை முடித்த பின்னர் விடைத்தாள்களில் காலியாக உள்ள பக்கங்களை கோடிட வேண்டும். தேர்வுகளை நீலம் அல்லது கருப்பு நிற பால் பாய்ண்ட் பேனாவை கொண்டு எழுத வேண்டும்.

தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயரில் சாதி சான்றிதழ் – அரசு உத்தரவு!!

தேர்வு முடிந்ததும் விடைத்தாளில் தவறான பதிவு எண், பாட குறியீடு போன்றவை பதிவு செய்யப்பட்டிருந்தால் விடைத்தாள்கள் நிராகரிக்கப்படும். வீடுகளில் பேனா-பேப்பர் முறையில் ஆப்லைன் தேர்வாக, 3 மணி நேரம் நடைபெறும். காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகலில் 2.30 மணிக்கு துவங்கி 5.30 மணி வரையும் தேர்வுகள் நடக்கும். தேர்வு முடிந்ததும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ள படி, விடைத்தாள்களை PDF முறையில் மாற்றி, ஒரு மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடைகள் காலை 10 மணி வரை இயங்க அனுமதி? ஜூன் 7க்கு பின் தளர்வுகள் இருக்குமா!

தேர்வு தாள்களை மாணவர்கள் நூலால் கட்டி, கவரில் போட்டு விரைவு தபால், பதிவுத்தபால் அல்லது கூரியர் மூலமாக அந்தந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில், அன்றைக்கே அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுக்கு முன்னாக அந்தந்த கல்வி நிறுவனங்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல், கூகுள் கிளாஸ்ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் தேர்வு துவங்கும் 30 நிமிடத்திற்கு முன்பு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் ரூ.4000 & 14 மளிகைப் பொருட்கள் வழங்கல் – முதல்வர் துவக்கி வைப்பு!

மாணவர்கள் ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும். அது தவிர ஒவ்வொரு தாளின் மேல்புறத்தில் மாணவர்களின் பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு தாளின் கீழ்ப்பக்கத்திலும் தேர்வு தேதி, பக்க எண், கையொப்பம் ஆகியவையும் பதிவிட வேண்டும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விரிவான விளக்கங்களை கல்வி நிறுவனத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!