மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகளாக நீட்டிக்கலாம் – ஆய்வு அறிக்கை வெளியீடு!!
மனிதர்களின் ஆயுட்காலத்தை நீடிக்கும் புதிய வகையிலான ஆராய்ச்சியின் மூலம் சராசரி வயதை 150 ஆக உயர்த்தலாம் என்று சிங்கப்பூரை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழு அறிவித்துள்ளது.
ஆய்வு அறிக்கை:
சராசரியாக மனிதனின் ஆயுட்காலம் தற்போது 65 முதல் 70 ஆண்டுகளாக ஆக உள்ளது. நமது முன்னோர்களின் சராசரி வயதை விட தற்போது 10 முதல் 15 வருடங்கள் குறைந்துள்ளது. மனிதனின் ஆயுட்காலத்தை நீடிக்கும் வகையிலான ஆராய்ச்சியை சிங்கப்பூரை சேர்ந்த ஜிரோ என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
டிமோதி பைர்கவ் என்ற இந்த நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி தலைமையில் மனிதர்களின் வாழ்நாள் நீட்டிப்பு பற்றிய ஆய்வு நடக்கிறது. இந்த ஆய்வின் அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மனிதர்களின் ரத்த அணுக்கள் இழப்பை ஈடு செய்யும் திறன் 35 முதல் 45 வயதிற்குள் குறையத் தொடங்குகிறது. இதனால் மனிதர்களின் வாழ்நாள் சுருங்கி விடுகிறது. வயது அதிகரிக்கும் போது புதிய செல்கள் உருவாகும் திறன் குறைகிறது.
தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் – நிபுணர்கள் பரிந்துரை!!
ஒரு வயதிற்கு மேல் செல்கள் உருவாவது முற்றிலும் நின்று விடும், அப்போது தான் மரணம் நிகழ்கிறது. இந்த ஆய்வில் புதிய செல்களை உருவாக்கும் திறன் முற்றிலும் இழக்க 120 முதல் 150 ஆண்டுகள் ஆகும் என்பது தெரிய வந்துள்ளது. புதிய செல்கள் உருவாகும் திறனை அதிகரிப்பதன் மூலம் ஒருவரின் வாழ்நாளை 150 ஆண்டுகளாக அதிகரிக்கலாம். வருங்காலத்தில் இதற்கான புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று ஆய்வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.