தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி (ஸ்போக்கன் இங்கிலீஷ்) அளிக்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல் முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பயிற்சிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆங்கில பேச்சுப் பயிற்சி:
தமிழகத்தில் 1 – 10ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் கடந்த 13ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தை போல இல்லாமல் தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் ஊரடங்கு காலத்திலும் வீட்டில் இருந்து கல்வி பயின்று வந்தனர். அதனை தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்டம் நடைமுறைப்படுத்த பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் 1 – 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை சரி செய்ய எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025 ம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களும் புரிந்துணர்வுடன் படிக்கவும் அடிப்படை கணித திறன்களை கொண்டிருப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது 4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில புலமை அளிக்கும் நோக்கில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
ஜூன் 25ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
இத்திட்டத்தை செயல்படுத்த அரசு பள்ளிகளில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஜூன் 30, 31 ஆகிய இரண்டு தேதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தொகுதி வள நபர்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி மற்றும் ஜூன் 23 மற்றும் 24ம் தேதி அன்று RPகளின் தொகுதி நிலை பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.