தமிழக அரசின் பொதுப்பணித்துறை டெண்டர்கள் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் டெண்டர் பணிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு :
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சென்னை நகருக்கு அருகில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்தார். சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இந்திரா நகர் சாலை சந்திப்பு, டைடல் பார்க் சந்திப்புகளில் ரூ.108.13 கோடி செலவில் சாலை மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Chat Backup அம்சம் நீக்கம்!!
அங்கு யு வடிவ மேம்பாலங்கள், இசிஆர் சாலை நடைமேம்பாலம் மற்றும் பக்கிம்காம் கால்வாய் மெது கூடுதல் பாலம் அமைப்பது போன்ற பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், சென்னை எல்லைக்குள் உள்ள ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை சுங்கச்சாவடிகளையும் ஆய்வு செய்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த பகுதிகளில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளை அறிந்து அவற்றை நீக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஆய்வு மேற்கொண்டதை குறித்து அறிவித்தார். மேலும், தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்ந்த டெண்டர்கள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்றும் கூறினார்.