தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சேவை துவக்கம்? துறை அதிகாரிகள் தகவல்!
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதான பேருந்து போக்குவரத்து சேவைகள் ஜூன் 21 ஆம் தேதிக்கு மேல் மீண்டுமாக துவங்கலாம் என போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சேவைகள்
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் காரணமாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் வீதம் குறைந்து வரும் காரணத்தால் வரும் நாட்களில் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவானது, ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இன்று முதல் குருவாயூர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அதன் படி ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டால், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் மீண்டுமாக துவங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜா கண்ணப்பன் முதல்வருடன் இன்று (ஜூன் 16) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகள் மீண்டுமாக இயக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாட்டிலேயே பச்சை பூஞ்சை நோயால் முதல் நபர் பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
தவிர போக்குவரத்து கழக ஊழியர் கூறுகையில், ‘தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதற்கு முன்னதாக போக்குவரத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தியுள்ள ஊழியர்கள் அதன் விவரங்களை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போக்குவரத்துக்கு சேவைகள் மீண்டும் துவங்கும் போது, தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.