தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அக்.9ம் தேதி பொது விடுமுறை – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (09.10.2021) நடைபெறவுள்ளது. இதனையடுத்து நாளை தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் அரசின் நிர்வாக பணிகளுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து அதற்கான பணிகளில் இறங்கியது. தொகுதி வாரியாக வாக்காளர்கள் கணக்கெடுப்பு நடத்தி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
TN TRB போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த பரிசீலனை!
பிறகு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி தேர்தல் நடைபெறும் நாளன்று மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆதார் உள்ளிட்ட 11 அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
Reliance Jio நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் – யாருக்கெல்லாம் கிடைக்கும்?
அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்த படி கடந்த 6ம் தேதி பொது விடுமுறையுடன் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நாளை (09.10.2021) 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் அதனை முன்னிட்டு தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.