தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை - கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!
தமிழகத்தில் பள்ளிகளுக்கு பிப்.18 (வெள்ளிக்கிழமை) விடுமுறை – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

தமிழகத்தில் வரும் 19ம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் 18ம் தேதி நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் தகவல்:

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும் மற்றும் கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும்.

தமிழக அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – மருத்துவ காப்பீட்டில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு!

மேலும் வாக்குச்சாவடிகள் அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. உடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை நகராட்சி, தளி, மடத்துக்குளம், கொமரலிங்கம், சங்கரமாநல்லுார் ஆகிய பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள், தேர்தல் வாக்குச்சாவடிகள் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு வரும் 18ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி!

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், கிராமப்புறங்களில் உள்ள குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து, 80%ஆசிரியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு 18ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை பொறுத்து, அந்தந்த தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விடுமுறைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்று கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!