நாட்டில் மே 2 ஆம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
நமது நாட்டுக்கு அண்டை நாடான இலங்கையில் மே 2 ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் பொது விடுமுறையாக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனை பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்து உள்ளார்.
பொது விடுமுறை
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், தற்போது பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிப்பில் இருந்து வருகின்றனர். மேலும் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் போனதால் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், உணவு பொருட்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நாட்டில் தினம்தோறும் 12 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன எரிபொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகன ஓட்டிகள் பெட்ரோல் போட்டு செல்கின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு விற்பனை!
இந்த பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் இலங்கை நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பம் தான் என்று அந்த நாட்டின் மக்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பொது மக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவுகள் பெருகி கொண்டே வருகிறது. அதனால் அதிபருக்கு பெரிய குடைச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த போராட்டம் அதிபர் மாளிகை முன்பு நடைபெறுவதால் அங்கு ராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இது தவிர நாட்டில் முழு ஊரடங்கும் அறிவித்து இருந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பொது நிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், தொழிலாளர் தினமான இன்று விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து, மே மாதம் 2ஆம் தேதி (நாளை) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.