தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை – அரசுக்கு வலியுறுத்தல்!

0
தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை - அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி பொது விடுமுறை – அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் மார்ச் 4ம் தேதி அன்று அய்யா வைகுண்டர் உதய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கனிமொழி M.P அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை:

தமிழகத்தில் அரசு விடுமுறை தினங்கள் அனைத்தும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுவதுமாக பட்டியலிடப்பட்டு அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிடப்படும். இதன் அடிப்படையில் தான் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அரசு விடுமுறை அளிக்கப்படாத ஒரு சில முக்கிய தலைவர்களின் முக்கிய தினங்கள் அல்லது ஏதேனும் முக்கிய திருவிழாக்கள் போன்றவை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கடைபிடிக்கப்பட்டால் அன்றைய தினம் அங்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அளிக்கப்படும் விடுமுறை பொது விடுமுறையாக கருதப்படுகிறது.

TNPSC குரூப் 2 & 2A | 5000+ காலிப்பணியிடங்கள், மே 21ல் தேர்வு! விண்ணப்பிக்க மார்ச் 23 கடைசி நாள்!

அதன்படி, முன்னதாக அய்யா வைகுண்டர் தினமாக அனுசரிக்கப்படும் மார்ச் மாதம் 4ம் தேதியான மாசி 20 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் பிறப்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து தாழகிடப்போரை ‘ தற்காப்பது தாமம்’ என்கின்ற நிலையில் அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார் என்றும், தீண்டாமை தீதை அகற்ற தொட்டு நாமமிடும் நிலையை உருவாக்கினார்.

Post Officeல் ரூ.63,200 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

ஆண்கள் தலையில் தலைப்பாகையுடன் வழிபட அனுமதி அளித்து கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்தார் என்றும் சாமி தோப்பு பால ஜனாதிபதி அவர்கள் கனிமொழி M.P அவர்களிடம் இந்த விஷயங்களை தெரிவுப்படுத்தி கோரிக்கை மனுவை அளித்துள்ளார். கோரிக்கையின் மனுவின் படி, அய்யா வைகுண்டருக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைப்பதி அமைந்துள்ளது என்றும், தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வழிபாட்டு தலங்கள் உள்ளதாகவும், இதனால் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!