மார்ச் 24ம் தேதியன்று அனைத்து ஊழியர்களுக்கும் பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் மார்ச் 24 அன்று தேர்தல் நடத்தப்பட இருப்பதால் அனைத்து ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளில் மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
வரும் மார்ச் 24ம் தேதியன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, பல்வேறு துறையில் உள்ள ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு தேதியான மார்ச் 24 அன்று ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க ஒடிசா அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒடிசாவில் 24.03.2022 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அகவிலைப்படி மேலும் 3% அதிகரிப்பு – விரைவில் அறிவிப்பு!
அந்த வகையில் 106 நகராட்சிகள், என்ஏசிக்கள் மற்றும் 3 மாநகராட்சி பொதுத் தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வசதியாக, எந்தவொரு வணிகம், வர்த்தகம், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வாக்களிக்க விரும்பும் தேதியில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் – அரசின் புதிய பட்ஜெட் அம்சங்கள்!
இப்போது ஒரு குறிப்பிட்ட நகராட்சி, என்ஏசி மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் தங்கள் வாக்குப்பதிவை காட்ட போதுமானதாக இருக்கும் எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஊழியர்கள் இந்த ஊதியத்துடன் கூடிய விடுமுறை பலனைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநிலம் முழுவதும் உள்ள வருவாய் கோட்ட ஆணையர்கள், கலெக்டர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், வணிகம், வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் துறை கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.