மார்ச் 17ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
காரைக்கால் கைலாசநாதர் கோயில் தேரோட்டம் மார்ச் 17ம் உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கோயில் தேரோட்டம்:
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்களுக்கு மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும்.
மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு!
அதேபோல், பாண்டிச்சேரியின் காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயில் தேரோட்டம் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக, கடந்த சனிக்கிழமை அன்று காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் நடக்க உள்ள பிரமோட்சவம் தொடர்பாக அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். கோயில் வளாகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் என்.சிவசுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அரசு நிறுவனங்களில் 95% வேலைகள் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அப்போது, தமிழகத்தில் பல முக்கிய தளங்களில் நடத்தப்படும் கோயில் தேரோட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை .அளிக்கப்படுகிறது. அதேபோல், மார்ச் 17 ம் தேதி அன்று நடக்க இருக்கும் காரைக்கால் கைலாசநாதர் கோயில் தேரோட்டத்திற்கும் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும், கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த வழக்கத்தை இந்த ஆண்டும் செயல்படுத்த வேண்டும். இது குறித்து புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் மற்றும் மாவட்ட ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.