ஜூன் 8ம் தேதி பொது விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் கர்பி அங்லாங் மற்றும் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டங்களின் 26 கவுன்சில் தொகுதிகளுக்கு ஜூன் 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
அசாம் மாநிலத்தில் 977 வார்டுகளை உள்ளடக்கிய 80 நகராட்சி இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அம்மாநிலத்தில் 36 மாவட்டங்களில் உள்ள 2,054 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 16,73,899 பேர் வாக்களித்தனர். மேலும் 17 மூன்றாம் பாலினத்தவரக்ளும் வாக்களித்தனர். அசாமில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நகராட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 8ம் தேதியன்று அசாம் மாநிலத்தில் கர்பி ஆங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
இத்தேர்தலை முன்னிட்டு அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்லாங் மற்றும் போடோலாண்ட் டெரிடோரியல் கவுன்சிலில் உள்ள பகுதிகளுக்குள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கர்பி ஆங்லெங் தொகுதியின் இடைத்தேர்தலை முன்னிட்டு போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ் அஸாம் மாநில தேர்தல் ஆணையத்தால் இந்த விடுமுறை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அல்லாத நிறுவனங்கள், வங்கிகள், தேயிலைத் தோட்டம் போன்றவைகள் அன்றைய தினம் இயங்காது.
டிகிரி முடித்தவர்களுக்கான Flipkart நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
அதனை தொடர்ந்து தொழில்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் பொது விடுமுறை பொருந்தும். இத்தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி தேர்தலில் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 7,03,298 வாக்காளர்களில் 3,55,503 ஆண்கள் மற்றும் 3,47,790 பெண்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.