ஜூன் 25ம் தேதி அன்று பொது விடுமுறை – அரசு முக்கிய உத்தரவு!
போபால் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 25ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனால் ஜூன் 25ம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படும் என்று குஜராத் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முக்கிய உத்தரவு:
குஜராத் மாநிலம் போபால் மாவட்டத்தில் வரும் ஜூன் 25ம் தேதியன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 ன் விதிகளின் கீழ் அம்மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசு விடுமுறை உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘வரும் ஜூன் 25ம் தேதி அன்று போபால் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மூன்று அடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
எனவே அன்று ஒரு நாள் மட்டும் போபால் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 இன் விதிகளின் கீழ் பொது விடுமுறை அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பஞ்சாயத்து தேர்தலில் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும் தேர்தல் வாக்குப்பதிவு அன்று அடைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களின் வாராந்திர விடுமுறைக்கு பதிலாக ஜூன் 25ம் தேதி அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் ஆட்சேர்ப்பு – ஜூலை 1 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது தவிர வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து செயல்படும் தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக 2 மணி நேரம் மட்டும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக முடிவடையும் என்றும் இரண்டாவது ஷிப்ட் வழக்கமான அட்டவணைக்கு 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.