பிப்ரவரி 23ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக உள்ள நிலையில், லக்னோ மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று பொது விடுமுறை தினமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறை:
நாடு முழுவதும்பிப்ரவரி 10 ம் தேதி முதல் உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. மொத்தம் உள்ள தொகுதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நாள் அன்று அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
GAIL நிறுவனத்தில் 48 காலிப்பணியிடங்கள் – ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை மாத ஊதியம்!
பஞ்சாப் மாநிலத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இதேபோல், ஒவ்வொரு மாநிலங்களுக்குமான அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. உத்தரபிரதேசத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ள நாட்களை பொறுத்து மாவட்ட வாரியாக விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. கான்பூரில் பிப்ரவரி 20ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதேபோல், தற்போது லக்னோ மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரபூர்வ அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், லக்னோ தேர்தல் நடைபெறும் நாளான பிப்ரவரி 23ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிச் சட்டம், 1881ன் படி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வணிக மற்றும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கருவூலங்களும் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக நடந்து வரும் உத்தரபிரதேச தேர்தலில் நான்காவது சுற்றில் தான் லக்னோ நகர் வாக்களிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.