பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு! தேர்தல் எதிரொலி!
உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் சட்டசபை தேர்தலையொட்டி பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ம் தேதி முதல் துவங்கி பல்வேறு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தல் மார்ச் 7ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 20ம் தேதியன்று உத்திர பிரதேசத்தின் கான்பூர் நகரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் சட்டப்பேரவை தேர்தலில் 100% வாக்குகளை உறுதி செய்வதற்காக பிப்ரவரி 20ம் தேதியன்று கான்பூர் முழுவதும் பொது விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
TNPSC 151 துறைத்தேர்வுகள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!
அதாவது, இந்திய தொழில்கள் சங்கத்தின் (IIA) பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கான்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி நேஹா ஷர்மா, தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் பிப்ரவரி 20ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் அளித்திருக்கிறார். அந்த வகையில் இந்த விடுமுறை நாளில் அனைத்து தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை நாட்கள் குறைப்பு – கல்வித்துறை தீவிர ஆலோசனை!
இப்போது வாக்குப்பதிவு தினத்தன்று தொழில் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறையை அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், வாக்களித்த ஊழியருக்கு ஊக்கத் தொகையாக ரூ.100 வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கான்பூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி, தொழில் முனைவோர் தங்கள் சங்கங்களில் கால் சென்டரை உருவாக்கி, சங்க உறுப்பினர்களை தொலைபேசி அழைப்புகள் மூலம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.