மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!

0
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு - உத்தரவு வெளியீடு!
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு - உத்தரவு வெளியீடு!
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 20ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு வெளியீடு!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு வெளியீடு:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் கூடுதல் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 10 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், கோவா மாநிலத்துக்கு 14 ஆம் தேதியும், பஞ்சாப் மாநிலத்தில் 20 ஆம் தேதியும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் ஆவது உங்கள் கனவா? CISF இல் 1149 கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த வகையில் தேர்தல் தினத்தில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வசதியாக அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் வாக்களிக்க வசதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அரசு சாரா மற்றும் தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.

TN TRB ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு – தீவிர கட்டுப்பாடுகளுடன் தொடக்கம்!

மேலும் வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்றாலும், அன்றைய தினமும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் என்பதை கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!