நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

0
நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
நாளை மறுநாள் (பிப்.14) அரசு பொது விடுமுறை அறிவிப்பு – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சில தகவல்களை பார்க்கலாம்.

பொது விடுமுறை

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. மேலும் இந்தியாவிலும் கர்நாடக, மஹாராஷ்டிர, ஆந்திர பிரதேசம், உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது உணர முடிந்தது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – அரசு உத்தரவு!

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும் என்பதால் அந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

90’S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் ‘சக்திமான்’ மீண்டும் திரையில் – சோனி நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு!

இந்த நிலையில் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் வருகிற 14ம் தேதி அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு பதிவு மார்ச் மாதம் 10ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அம்மாநில தலைமை செயலாளர் சுக்பிர் சிங் சந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தெரிவித்தாவது, சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 14ம் தேதி நடைபெற உள்ளதால் அன்று ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!