பிப்.14 மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிப்பு – தேர்தல் வாக்குப்பதிவு எதிரொலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பிப்ரவரி 14-ஆம் தேதி அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாள்:
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தல் 2022 பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 அன்று நடைபெறும். உத்தரகண்டில் கடந்த முறை சட்டமன்றத் தேர்தல் (2017 இல்) ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சி (BJP) மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் 57 ஐ வென்றது. இந்த முறை உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக, ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் (EC) தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சாலை நிகழ்ச்சிகள், வாகன பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கான தடையை பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், 1,000 பேர் வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய அனுமதித்துள்ளது. மேலும், 10 பேருக்குப் பதிலாக 20 பேர் வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் மற்றும் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10 மற்றும் மார்ச் 7ம் தேதிக்கு இடையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும்.
பிப்ரவரி 15 காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – அலுவலகங்கள் 100% திறனுடன் திறப்பு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பிப்ரவரி 14-ஆம் தேதி அம்மாநில அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சுக்பீர் சிங் சந்து சனிக்கிழமை பிறப்பித்தார். அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.