பிப்ரவரி 14ம் தேதி அன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கோவா அரசு பிப்ரவரி 14 ஆம் தேதியை “பொது விடுமுறை” என்று அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
பொது விடுமுறை:
கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும். கோவாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 332 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தலில் பெறப்பட்ட மொத்த வேட்புமனுக்கள் 587 ஆகும். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி (AAP) , மற்றும் அறிமுக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆகிய 4 முக்கிய கட்சியினர் தற்போதைய தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பிப்ரவரி 18 வரை மாநிலத்தின் 8 முக்கிய நகரங்களில் மட்டும் இரவு ஊரடங்கு – அரசு அறிவிப்பு!
கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மியும், பாஜகவும் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சாவந்தை முதல்வராக்க பாஜக முடிவு செய்துள்ளது. தேர்தல் நாளன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக கோவா அரசு தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, கோவா அரசு பிப்ரவரி 14 ஆம் தேதியை “பொது விடுமுறை” என்று அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறப்பு, 100% தியேட்டர்கள் அனுமதி? முதல்வர் ஆலோசனை!
மேலும், அன்றைய தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் உள்ள தொழில்துறை தொழிலாளர்கள், அரசு துறைகள் மற்றும் மாநில அரசு தொழில்துறை துறைகளின் தினசரி ஊதிய தொழிலாளர்கள், கோவாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள், அனைத்து தனியார் நிறுவனங்களின் தொழிலாளர்கள், தினசரி ஊதியம் / சாதாரண தொழிலாளர்கள், வணிகம், வர்த்தகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.