திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
திருவாரூர் மாவட்டத்தில் டிச.15ம் தேதி உள்ளூர் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து விதமான விழாக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கான முக்கிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதில் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து விதமான கோவில்கள், திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து விதமான கோவில்கள் திறக்கப்பட்டன. மேலும் திருவிழாக்கள் நடத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் அமைத்துள்ள தாவூத் காம் தர்காவில் கந்தூரி விழா நடைபெற உள்ளது.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இங்கு ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இவ்விழா தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது 720-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இவ்விழா தொடர்ந்து 14 நாட்கள் வரை நடைபெறும். ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. இவ்விழாவில் மிகவும் புகழ்பெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியானது வருகிற டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான பொது மக்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கூட வருகை தருகின்றனர். அத்துடன் இவ்விழாவின் ஊர்வலமானது பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடைகிறது. இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு திருவாரூர் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு விடுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு ஜனவரி 8 ஆம் தேதி அன்று வேலை நாளாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!