தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஏப்ரல் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்ட திருவிழா நடைபெறுவதால் வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி மட்டும் அம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு தெரிவித்து உள்ளார்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் சென்ற இரு ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டு இருந்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை நடத்தி வந்தனர். அதனால் மாணவர்களும் வேறு வலி இன்றி நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் தவித்து வந்தனர். மேலும் அதனை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் எந்த திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் சற்று குறைந்த காரணத்தால் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகளில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அன்று மட்டும் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு அறிவித்து உள்ளார்.

ExamsDaily Mobile App Download

மேலும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் இந்த விடுமுறை பொருந்தாது என்றும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து,இந்த விடுமுறைக்கு பதிலாக அடுத்தாக வர உள்ள மே மாதம் 7 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!