தமிழகம் முழுவதும் பிப்.19ம் தேதி அரசு பொது விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொது விடுமுறை:
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் மது கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – பான், ஆதார் இணைப்பு! மார்ச் 31 கடைசி நாள்!
அதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துகுடி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் ஒரு வார்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற வார்டுகளுக்கு அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் பின்பு மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
ரத்து செய்யப்பட்ட ஊரடங்கு – வழக்கம் போல் இயங்கும் இரு மாநில பேருந்து சேவை!
பிப்ரவரி 19ம் தேதி தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் விடுமுறை தினத்தில் ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது. விடுப்பிற்கு சம்பள பிடித்தமோ, சம்பளக் குறைப்போ செய்ய கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது