தமிழகத்தில் டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 20ம் தேதி அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏதேனும் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள் உள்ளது. இந்த திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். அதனால் அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த வகையில் கடந்த 14ம் தேதி திருச்சி மாவட்டம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டும் 15ம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டும் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அதன் தொடர்ச்சியாக தற்போது கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களில் ஆகாய தலமாக போற்றப்படும் இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படும். சிவபெருமான் திருவாதிரை நாளில் தனது ஆனந்த திருநடன கட்சியை பதஞ்சலி முனிவருக்கு அருளியதாக ஐதீகம் இதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் – முழு விபரங்கள் இதோ!

ஆண்டுதோறும் தமிழ் மாதமான மார்கழியில் 10 நாட்கள் இவ்விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். நடராஜர் அலங்கரிக்கப்பட்டு அவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். இந்த திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நன்மை என்று கூறப்படுகிறது. நடப்பு ஆண்டு இந்த ஆருத்ரா தரிசன விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி ஆருத்ரா தரிசன காட்சி நடைபெறும். இதனை முன்னிட்டு அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!