நாட்டில் ஜூலை 8 முதல் 12 வரை பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!
உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை குறித்த அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்
அரசு அறிவிப்பு:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். இந்த பண்டிகையை இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் புனித யாத்திரை செல்வதாகும். இந்த கடமைகளில் கடைசியானது இறைவனுக்கு பலியிடுதலாகும்.
ஜூலை 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
இஸ்லாமியர்களால் இறைத்தூதராக நம்பப்படுபவர் இப்ராஹிம் . இவர் 4000 ஆண்டுகளுக்கு முன் ஈராக்கில் வாழ்ந்தார். இவருக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தார். கடைசியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலமாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார். இஸ்மாயிலை பாசமாக வளர்த்து வந்தார் இப்ராஹிம்.இந்நிலையில் இஸ்மாயில் பால்ய பருவம் அடைந்த உடன் இப்ராகிமின் கனவில் குழந்தையை பலியிடுமாறு கட்டளையிட்டார். இதுகுறித்து இஸ்மாயிலிடம் கூறியதும், சிறிதும் தயங்காமல் சம்மதித்தார்.
Exams Daily Mobile App Download
இதனால் இப்ராகிமின் சம்மதத்துடன் அவரை பலியிட துணிந்தார். அப்போது சிஃப்ரயீல் எனும் வானவரை அனுப்பிய இறைவன் அதை தடுத்து, ஒரு ஆட்டை கொடுத்து இஸ்மாயிலுக்கு பதிலாக இந்த ஆட்டை எனக்கு பலியிடவும் என கட்டளை பிறப்பித்தார்.அந்த நிகழ்விலிருந்து தான் இப்ராகிமின் தியாகத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு வருடம் பாகிஸ்தானில் வரும் ஜூலை 8 முதல் 12 வரை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத் ஈத்-உல்-அழா பண்டிகையை முன்னிட்டு நாட்டில் 5 நாட்கள் (ஜூலை 8 முதல் 12 வரை) விடுமுறை என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.