அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை – சூப்பர் உத்தரவு!

இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

பொது விடுமுறை:

‘ஈத்” என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இரு பெரும் திருநாட்களில் ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகிறது. ரமலான் பெருநாள் அல்லது நோன்புப் பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ரமலான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்ற பின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்த பின்னர் கொண்டாடப்படும் பெருநாளே ஈகைத் திருநாள். ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது. இந்த திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு நாட்டிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம் ஆகும்.

TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்!

அந்த வகையில் இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களின் நாட்காட்டி தொடர்பான மத்திய அமைச்சரவையின் முடிவை செயல்படுத்துவதில் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 3 வரை தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ExamsDaily Mobile App Download

மேலும் ரமலான் மாதம் 30 நாட்கள் நிறைவடைந்தால், ஈத் திங்கள், மே 2 (ஷவ்வால் 1) அன்று இருக்கும். தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஊழியர்களுக்கு சனி (ஏப்ரல் 30), ஞாயிறு (மே 1), திங்கள் (மே 2), செவ்வாய் (மே 3) மற்றும் புதன் (மே 4) உள்ளிட்ட ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ரமலான் 29 நாட்களுக்கு நீடித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் புனித மாதம் 30 வரை நீடித்தால் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் இடைவெளி கிடைக்கும். இப்போது வானியல் ரீதியாகப் பார்க்கையில் விடுமுறை நாட்களின் சாத்தியமான தேதிகள் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை இருப்பதால் இந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!