தமிழகம் முழுவதும் மார்ச் 4 (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட இன மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை அய்யா வைகுண்டா் மீட்டெடுத்தார். இதையடுத்து வருகிற மாசி 20ம் தேதி அன்று அய்யா வைகுண்டா் உதய தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
பொது விடுமுறை
அய்யா வைகுண்டர் தாழ்த்தப்பட்ட இன மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க அரும்பாடுபட்டவர். அத்துடன் தமிழகத்தில் ஜாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடியவர்களுள் இவரும் ஒருவர். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று ஏற்பட்ட ஜாதி கொடுமைகளுக்கு எதிராக புரட்சி செய்தார். திருவிதாங்கூர் மன்னரின் மனதை மாற்றி நல்வழிப்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அதனால் இவரை தமிழக மக்கள் வணங்கி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் அய்யா வைகுண்டர் அவதார திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அய்யா வைகுண்டர் உதய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமித்தோப்பில் அய்யா வைகுண்டர் பதி கோவில் உள்ளது. இங்கு அய்யா வைகுண்டரின் அவதார தின விழா ஆண்டுதோறும் மாசி மாதம் 20ம் தேதி நடைபெறும். இவ்விழாவிற்கு வெளி மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அத்துடன் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அய்யா வைகுண்டர் வழிபாட்டு தலங்கள் உள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளையே கடைசி நாள்!
அதனால் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று சாமிதோப்பு பாலஜனாதிபதி என்பவர் கனிமொழி அவர்களிடம் மனு கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் வருகிற மார்ச் 4ம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினமாக கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்