தமிழகத்தில் பிப்.19ம் தேதி பொது விடுமுறை – எங்கெங்கு தெரியுமா? முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி பொது விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் இதில் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெற்றது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இனி கடைகளின் முன் அறிவிப்பு பலகை!
இதனை தொடர்ந்து பிப்ரவரி 19ம் தேதி அன்று காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் வருகிற 22ம் தேதி அன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் உள்ள சூழலில் தேர்தலை மேலும் கொரோனா பரவாத தேர்தலாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிப்.17 மாலை 6 மணிமுதல் புதிய கட்டுப்பாடுகள் – தேர்தல் பிரச்சாரம் நிறைவு!
தமிழகத்தில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் வருகிற 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் பிப்ரவரி 17, 18, 19ம் ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும் மற்றும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதியை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.