தமிழகத்தின் இம்மாவட்டத்தில் நவ.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் மயிலாடுதுறையில் துலா உற்சவ விழா கொண்டாடபடவுள்ளதால் நவ.16ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டாண்டு காலமாக ‘துலா உற்சவ விழா’ எனப்படும் காவிரியில் புனித நீராடும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வானது வட நாட்டின் கும்பமேளாவிற்கு நிகராக இருக்கும் என கூறப்படுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறைக்கு சென்று அங்கே ஓடும் காவிரி ஆற்றில் துலாக்கட்ட பகுதியில் மூழ்கி நீராடினால் உனது பாவங்கள் நீங்கும் என புராண கதைகள் கூறுகின்றன. அதன்படி ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் கவனத்திற்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
எனவே லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா விழாவிற்கு மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடி வருகின்றனர். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் புனித நீராடும் வகையில் போதிய தண்ணீரை திறக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை அனுப்பி, தமிழக அரசின் பொதுப்பணித்துறையும் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்ய ‘ஆதார்’ கார்டு கட்டாயம் – அரசு அறிவிப்பு!
காவிரியில் போதிய தண்ணீர் வருவதால் இந்த ஆண்டு துலா விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இதில் பக்தர்கள் பெருமளவு பங்கேற்க ஏதுவாகவும், துலா உற்சவத்தின் ஆன்மிகப் பெருமைகளையும், இதன் மூலம் வருங்காலங்களில், பழமைமிக்க மயிலாடுதுறை துலா விழாவின் சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துலா உற்சவம் கடைசி நாளான ஐப்பசி 30ம் தேதி (நவம்பர் 16ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அளிப்பதுடன், அதற்கான உரிய அனைத்து முன் ஏற்பாடுகளையும் முன்கூட்டியே அரசு சார்பில் மேற்கொண்டு பக்தர்கள் மகிழும் வண்ணம் செயல்படுத்திட வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.