அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் அறிவிப்பு – மே 2ம் தேதி பொது விடுமுறை!
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் மே மாதம் 2ம் தேதியன்று பொது விடுமுறை தினமாக கடைபிடிக்கப்படும் என இலங்கையின் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்துள்ளார்.
பொது விடுமுறை
உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளி வர்க்கங்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ம் தேதியன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாளை (மே 1) தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்பட இருக்கிறது. இப்போது, தொழிலாளர் தினம் இந்த ஆண்டு மே 1ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அரசு ஊழியர்களுக்கு மே 2ம் தேதி திங்கட்கிழமையன்று சிறப்பு விடுமுறை அளிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்?
அந்த வகையில் இலங்கையின் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி, மே தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார சூழலுக்கு மத்தியில் போக்குவரத்து சேவைகளில் தற்போது நிலவும் சிரமங்களை கருத்தில் கொண்டு மே 2ம் தேதி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜே.ஜே. ரத்னசிறி அறிவித்துள்ளார். அதன்படி, மே 2ம் தேதி திங்கட்கிழமை அன்று பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ‘தற்போது போக்குவரத்து அமைப்பில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் மின்சாரத் தடையின் போது அலுவலகப் பணிகளைப் பராமரிப்பதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, மே 2ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது விடுமுறை, உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கான சிறப்பு விடுமுறையாகவும் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், இந்த விடுமுறையானது அத்தியாவசிய அரசாங்க சேவைகளை வழங்குவதற்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.