ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டுவரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பொது விடுமுறை
இஸ்லாமிய மதத்தினரின் புனித நாளான நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் இந்த மாதம் இறுதியில் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில், இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு முடித்ததை அடுத்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு நாட்டிலும் பொது விடுமுறை அளிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 30 முதல் மே 4 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 8ம் தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
இது குறித்த முடிவு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க மனித வளங்களுக்கான ஃபெடரல் அத்தாரிட்டியால் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பெடரல் அத்தாரிட்டி ஃபார் கவர்ன்மென்ட் ஹூமன் ரிசோர்சஸ் படி, ஐக்கிய அரபு அமீரக அரசு ஊழியர்களுக்கு ரம்ஜான் 29 முதல் ஷவ்வால் 3 வரை இடைவேளை இருக்கும். ஹிஜ்ரி நாட்காட்டியில் ரமலான் மாதத்திற்குப் பிறகு வரும் மாதம் ஈத் அல் பித்ர் ஷவ்வாலின் முதல் நாளில் குறிக்கப்படுகிறது. இது குறித்த வானியல் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு ஈத் அல் பித்ர், மே 2 அன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ExamsDaily Mobile App Download
உத்தியோகபூர்வ ஐக்கிய அரபு எமிரேட் விடுமுறைகள் பட்டியலின்படி, ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை ஈத் அல் பித்ர் விடுமுறை இருக்கும். குறிப்பாக, ரமலான் 29 நாட்களுக்கு நீடித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் புனித மாதம் 30 வரை நீடித்தால் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் இடைவெளி கிடைக்கும். இப்போது வானியல் ரீதியாகப் பார்க்கையில் விடுமுறை நாட்களின் சாத்தியமான தேதிகள் ஏப்ரல் 30 முதல் மே 4 வரை இருப்பதால் இந்த நாட்களில் பொது விடுமுறை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.