கொரோனாவுக்கு மத்தியில் அச்சுறுத்தும் டெங்கு – பொது மக்கள் அச்சம் !!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது கடந்த 1ம் தேதி முதல் சென்னையில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பேரதிவுர்களை ஏற்படுத்தி வருகிறது. அரசும் தடுப்பு பணிகளை தொடர்ந்து எடுத்த வண்ணம் உள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது ஆனால் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை தீவிரமெடுக்கும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு புறம் பூஞ்சை நோய்களும் பரவி வருகிறது. மத்திய மாநில அரசு பூஞ்சை நோய்களுக்கும் மருந்துகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதிலிருந்து மீண்டு வர இயலாத நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
மாதம் ரூ.26,950 ஊதியத்தில் ரயில்வே பணியிடம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வந்தது. பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த காய்ச்சல் கொசுக்கள் மூலம் பரவுகிறது. கழிவு நீர் தேக்கமடைதல், குப்பைகள், மொட்டை மாடிகளில் மழைநீர் தேக்கம் போன்ற இடங்களில் டெங்கு கொசுக்கள் உருவாகிறது. தற்போது பருவ மழை பெய்து வருகிறது, கால நிலையும் மாற்றம் அடைந்துள்ளது. அதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 1ம் தேதி முதல் இதுவரை சென்னையில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொசு ஒழிப்புப் பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளில் 1,262 நிரந்தர பணியாளர்களும் 2,359 ஒப்பந்த பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வீடுகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.