தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். மேலும் பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு:

தமிழகத்தில் தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரசின் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் சுழற்சி முறையில் மாணவர்கள் வரவழைக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ‘இது’ குறித்து தகவல் தெரிவித்தால் பாராட்டு, வெகுமதி – மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!

அவ்வாறாக அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தேர்வுகள் நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தது. அந்த ஆலோசனைகளின் முடிவாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2 திருப்புதல் தேர்வு நடத்தப்பட்ட பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகள் திறக்கப்பட்டு 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் பாடங்களை விரைந்து முடிக்கும் வகையில் பிரிட்ஜ் கோர்ஸ் நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – நவ.26ம் தேதி நேர்காணல்!

மேலும் இல்லம் தேடிக்கல்வி திட்டமும் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திட்டங்களும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேர்வுக்கான பாடப்பகுதிகளை விரைந்து முடிக்கும் வகையில் மட்டுமே செயப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மே மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மார்ச், ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!