10, 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில கல்வி வாரியம் அறிவிப்பு!!
அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் அங்கு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளி வைப்பதற்கு அம்மாநில கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்புகளை உண்டாகியுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி நாடு முழுவதும் நடக்க இருந்த பல தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் மற்றும் பல்கலை தேர்வுகள் போன்றவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவது சரியான முடிவாக இருக்காது என்று தொடர்ந்து கோரிக்கை வைத்த காரணத்தால் பல மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்படும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.
தமிழக முதல்வராக மே 7ம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு – ஆளுநரிடம் உரிமை கோரினார்!!
சிபிஎஸ்சி வாரியமும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது, மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை தள்ளி வைப்பதாக அறிவித்தது. அசாம் மாநிலத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுத்தேர்வுகளை
நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் 11ம் வகுப்பு தேர்வுகளை மட்டும் காலவரையின்றி தள்ளி வைத்தது. அந்த மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகளை நடப்பு ஆண்டில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கிறார்கள்.
இந்நிலையில் அசாம் உயர்கல்வி கவுன்சில் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் ஏப்ரல் 17ம் தேதி அன்று மாநில கல்வி வாரியத்தில் பொதுத்தேர்வுகள் குறித்த முடிவுகளை 10 நாட்களுக்குள் எடுக்க கேட்டுக் கொண்டார். இதனால் அம்மாநிலத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைப்பதாக அம்மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும், திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ma’am tamilnadu ku public exam iruka