மார்ச் 28 முதல் 10 &12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம் – மாநில கல்வி வாரியம் அறிவிப்பு!
குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் 28ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணை:
2021 – 2022 ம் கல்வியாண்டில் இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில், குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் புதன்கிழமையான இன்று, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டது. SSC மற்றும் HSC ஆகிய இரண்டிற்கும் பொதுத்தேர்வுகள் மார்ச் 28 முதல் தொடங்கும்.
தமிழகத்தில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரக திறனாய்வுத் தேர்வு!
மாணவர்கள் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளமான gseb.org ல் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள தேதி அட்டவணையின்படி, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 9 வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெறும். 12 ஆம் வகுப்புக்கான அறிவியல் பாடத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 8 வரை மாலை 3 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 முதல் மதியம் 1.45 மணி வரையிலும், மாலை 3 முதல் 6.15 மணி வரையிலும் நடத்தப்படும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
தொழிற்கல்வித் தேர்வுகள் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையிலும் மூன்று ஷிப்டுகளாக நடத்தப்பட்டு ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் ஆஃப்லைன் முறையில் நடைபெறும் என்றும், மாணவர்கள் தேர்வு மையத்தில் அனைத்து கோவிட்-19 நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும், மாணவர்கள் தங்களின் அனுமதி சீட்டை தேர்வு மையத்திற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.