பிப்ரவரி 28 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் – கால அட்டவணை வெளியீடு!

0
பிப்ரவரி 28 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் - கால அட்டவணை வெளியீடு!
பிப்ரவரி 28 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் - கால அட்டவணை வெளியீடு!
பிப்ரவரி 28 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் – கால அட்டவணை வெளியீடு!

மிசோரம் பள்ளிக் கல்வி வாரியம் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 28 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும்,பொதுத்தேர்வின் விரிவான அட்டவணையை வாரியம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு அறிவிப்பு:

கடந்த கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் அபாயம் நீடித்து வந்த காரணத்தால் அதிக அளவிலான மாநிலங்களில் கல்வி வாரியம் மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை ரத்து செய்தது. மாணவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த முடிவு முதலில் நாட்டில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் எடுக்கப்பட்டது. அதன் பின்னர், தான் பல மாநிலங்களும் இந்த முடிவை அறிவித்தது. இதனால் இந்த கல்வியாண்டில் தொடக்கத்திலேயே சிபிஎஸ்இ வாரியம் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை இரண்டு பிரிவுகளாக நடத்த திட்டமிட்டது.

EMI செலுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயர்வு! அதிகரிக்கும் கட்டணம்?

அதன்படி, நவம்பர்-டிசம்பர் மாதத்தில் முதல் தேர்வும், பிப்ரவரி – மார்ச் மாதங்களில் இரண்டாம் பருவ பொதுத்தேர்வும் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிசோரம் பள்ளிக் கல்வி வாரியம் (எம்பிஎஸ்இ) நேற்று 10 ஆம் வகுப்புக்கான வாரிய தேர்வுகள் பிப்ரவரி 28ஆம் தேதியும், 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. கூடவே, பொதுத்தேர்வுகளின் விரிவான அட்டவணையை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்விற்கு பதட்டமின்றி தயாராகும் விதத்தில் முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மிசோரம் பள்ளிக் கல்வித்துறை தலைவரின் அறிவிப்பை தவிர வேறு எந்த வித எதிர்பாராத விடுமுறை நாட்களிலும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட மாட்டாது, என்றும் திட்டமிட்டபடி தேர்வுகள் குறித்த நாளில் நடத்தப்படும் என்றும் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுகள் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரே ஷிப்டில் நடைபெறும். மேலும், அரசு வெளியிட்டுள்ள அட்டவணையின் படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 25ம் தேதி வரையிலும் நடைபெறும். தேர்வு அட்டவணையை முழுமையாக அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!