தமிழகத்தில் CBSE 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் CBSE 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் CBSE 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் CBSE 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில், சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பில் நாளை ஒரே நாளில் 11 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இதனால் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. அறிவுரை வழங்கியிருக்கிறது. மேலும் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக வினாத்தாளை படிக்கச் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

11 பாடங்களுக்கு தேர்வு:

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் மாநில கல்வி பாடத்திட்டத்தின் படி பயிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) வெளியிட்ட அறிக்கையின் படி, சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறும். மேலும் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்புக்கான 2ம் பருவத் தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. சி.பி.எஸ்.இ10 மற்றும் 12ம் வகுப்பு முதல் பருவத் தேர்வுகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று தமிழகத்தில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நிலையில் நாளை (17ந் தேதி) தெலுங்கு, காஷ்மீரி, ஸ்பானீஸ், மியூசிக் உள்பட 11 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!