தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனித்தேர்வர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளதா என விரைந்து அறிவிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்வுகள் ரத்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட முடியாத காரணத்தினால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை – ஆப்பிரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் நிலைமை சரி இல்லாத காரணத்தால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனித்தேர்வர்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 60 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தேர்வு நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என தனித்தேர்வர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.