தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத நிலை இருப்பதால் அவர்களுக்கு பாடங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பேசுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கழிவறைகள் கட்டப்பட வேண்டியுள்ளது. இந்த கழிவறைகள் கட்ட இடம் இருந்தும் தேவையான நிதிகள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. மேலும் பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க வேண்டி இருக்கிறது. தற்காலிக ஆசிரியர் இடங்களை நிரப்பவும் அரசிடம் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் இருக்கிறது.
அகஸ்திய மலையில் யானை காப்பகம் அமைக்க திட்டம் – ஒன்றிய அரசு அறிவிப்பு
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய இயலாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளில் முழுமையான பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. அதனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.