தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுபவர்களின் கவனத்திற்கு – கல்வித்துறை விளக்கம்!
கல்வித்துறையில் தொடர் குளறுபடிகளால் அரசு பொதுத்தேர்வுப் பணிகளை புறக்கணிக்க அத்துறையின் அமைச்சுப் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து வெளியான தகவல் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வு
கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. வைரஸ் காரணமாக மாணவர்களுக்கு அதிகமாக விடுமுறைகள் விடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். மாணவர்களுக்கு விடப்பட்டிருந்த விடுமுறைகளை சரி செய்வதற்காக சனிக் கிழமைகளில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன் படி, இரண்டு வருடம் பொதுத் தேர்வு எழுதாத காரணத்தால் கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்களுக்கு பாடங்கள் முழுவதும் முடிக்காத காரணத்தால் நடத்தப்பட்ட பாட பகுதிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவித்தார் கல்வித்துறை அமைச்சர். மேலும், பொதுத் தேர்வுக்கான பணிகளில் டி.இ.ஓ., சி.இ.ஓ., அலுவலக பணியாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றும் தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் இப்பணிகளை தட்டிக்கழித்தல் கல்வி அலுவலர்கள் கடும் மன உளைச்சலில் தவிக்கின்றனர். இதனால் வரும் அரசு தேர்வு பணிகளை புறக்கணிக்க ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
ExamsDaily Mobile App Download
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, ஆனால் தேர்வுப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. அதை ஈடுகட்ட 2018 அக்டோபர் முதல் அரசு தேர்வுத் துறையில் மறுசீரமைப்பு செய்து 32 மாவட்டங்களில் உதவி இயக்குநர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு தலா 10 பணியாளர்கள் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர்கள் இதுநாள் வரை தேர்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை. உதவி இயக்குனர் அலுவலகங்களில் சி.இ.ஓ., அலுவலகத்தின் இணைத்து விட்டால் கல்வி அலுவலர்கள் பணி பளு குறையும். புதிதாக ஏற்படுத்தப்பட்ட 25 டி.இ.ஓ., அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில் கல்வி அதிகாரிகள் குளறுபடி செய்தால் வரும் பொதுத் தேர்வு பணிகளை புறக்கணிக்க ஆலோசித்து வருகிறார்கள்.