தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!
தமிழகத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து? தனியார் பள்ளிகள் கோரிக்கை!

தமிழகத்தில் இந்த ஆண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்ற நிலையில் பொது தேர்வை ரத்து செய்யக்கூடாது கட்டாயம் நடத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்தற்கு பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. 3 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் திருப்புதல் தேர்வு மற்றும் பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. மீண்டும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடந்து வந்தது.

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபான பார்களும் மூடல் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்த நேரத்தில் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு தொற்று பரவலை கட்டுப்படுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளதால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு தேர்வுத்துறை வளாகத்தில் கல்வியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கடந்த 10, 9,ம் வகுப்புகளில் தேர்வு எழுதவில்லை அரசு ஆல் பாஸ் என்று அறிவித்தது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

2 வருடங்களாக தேர்வு எழுதாததால் தற்போது திடீரென்று தேர்வு எழுதினால் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாது சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இதனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யஅரசு ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் 11ம் வகுப்பு பாடங்கள் உயர் கல்விக்கு அடிப்படையானது, தனியார் பள்ளிகளில் 11 ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதனால் கட்டாயம் பொது தேர்வை நடத்த வேண்டும் ரத்து செய்யக்கூடாது. பொது தேர்வு உண்டு என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!