தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது பொதுத்தேர்வுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பேரலையின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளதால் பொதுத்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
மேலும் கால அட்டவணையில் தெரிவித்தாவது, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சற்று நாட்களே உள்ளதால் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி பொதுத்தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் ஏப்ரல் 22ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை உறுதி அளித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தற்போது 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டத்தை தமிழக தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் www.dge.tn.gov.in -யில் Notification என்ற பகுதிக்கு சென்று பாடத்திட்டத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.